கடந்த சனிக்கிழமை ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சமய சொற்பொழிவுகளையும் கலை இலக்கியப் பண்பாடுகளை மக்களிடத்தில் மாணவர்களிடம் ஆற்றிவரும் மூத்த கலை இலக்கியவாதிகள் நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை.
செல்லையா பத்மநாதன் நினைவாக நிறுவப்பட்ட உருவச்சிலை சங்கத்தின் தலைவர் பத்மநாதன் சத்தியநாதனினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
எனினும் அழைப்பிதழில் பிரதம விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், தலைவர் சிவபூமி அறக்கட்டளை மற்றும் துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பளை, அழைக்கப்பட்டு உருவச்சிலை திரைநீக்கம் செய்யவும், சிறப்புரை ( சுத்தானந்த பாரதியார்) கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஆகியோரை அழைப்பதற்கும் ஆட்சி மன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
அன்றைய தினம் ஜனாதிபதியின் வருகையால் நிகழ்வுகளுக்கு தடை ஏற்படுத்தியதாக காரணம் சொல்லப்படுகின்றது.
முக்கியத்துவமான இந்நிகழ்வை பிறிதொரு தினத்திற்கு பிற்போடுவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கலாம்.
அவசர அவசரமாக அன்றைய தினம் மாலை ஒருசிலருடன் திரைநீக்கம் செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? நினைவுக்கல்லில் உருவச்சிலை சங்கத் தலைவரின் பெயரில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நடவடிக்கை திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.