_637b4edcba9ba.webp)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் பட்டப்பகுதியில் ஒன்பது பவுண் தங்க நகைகளை திருடிய குற்றச் செயலுடன் தொடர்புடையதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராறு, அணைக்கட்டு பகுதியிலுள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து ஒன்பது பவுண் தங்க நகைகள் மற்றும் பணமும் ஞாயிற்றுக்கிழமை (20) பகல் வேளையில் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டு உரிமையாளரான ஆசிரியர் வெளியில் சென்றதன் பின்பு யன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து சந்தேக நபர் கைவரிசையை காட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டு உரிமையாளர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.