சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்றையதினம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று கொண்டாடப்பட்டது.
காலை 10.30 மணியளவில் குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத் தலைவர் பிரேமன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலர் சுதர்சன் , கடல்தொழில் நீரியல் திணைக்கள பிரதிபணிப்பாளர் சுதாகரன், குருநகர் பங்கின் உதவி பங்குத்தந்தை அருட்பணி தயதீபன் அடிகளாரும், யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அன்னராசா , ஜே /69 கிராம சேவையாளர் சேந்தன் , இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர், கடற்தொழில் திணைக்கள பரிசோதர்களும் உத்தியோகதர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் காலநிலை மாற்றமும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரசினைகள் எனும் கருப்பொருளில் விசேட தெளிவூட்டல் நிகழ்வும், கடல் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு தற்போது ஓய்வு நிலையிலுள்ள கடல்தொழிலாளர்களுக்கு கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.