பிளாஸ்டிக் போத்தல்களில் திரவ சேதன உரங்களை விற்பனை செய்யும் சேதன உர உற்பத்தி நிறுவனத்தை உடனடியாக கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய உர செயலகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் போத்தல்களில் திரவ சேதன உரங்களை பொதி செய்வதற்கு எதிராக தேசிய உர செயலகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் இதன் எதிர்விளைவுகள் பல நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எனவே, நிறுவனங்கள் சேதன உரங்களை பிளாஸ்டிக் போத்தல்களில் விற்பனை செய்திருந்தால், அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும், பணம் செலுத்தக் கூடாது என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.