திருமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்!

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – வீரமாநகர் கிராமத்திலுள்ள காயன்கேணி வயல் வெளிக்குள் இன்று திங்கட்கிழமை  அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வயல் நிலங்களை மிதித்து, வேளாண்மைகளை சாப்பிட்டு சேதம் விளைவித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடன்பட்டு, பசளை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் செய்கைபண்ணும் வேளாண்மையை காட்டு யானைகள் சேதம் விளைவிப்பதால் தாம் பாதிப்படைவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

யானை பாதுகாப்புக்கென அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டும், காட்டு யானைகள் இவ் வயல்நிலங்களை சேதப்படுத்துகின்றன.எதற்காக இந்த அமைச்சு எனவும்,அட்டகாசம் புரியும் யானைகளை கட்டுப்படுத்த முடியாததாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் காட்டு யானைகள் வயல் நிலங்களுக்குள் உட்புகாதவாறு யானை பாதுகாப்பு வேலியை அமைத்துத் தருமாறு தோப்பூர் – வீரமா நகர் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *