
யாழ் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்திலே இன்றைய தினம் உலக மீனவரை தினத்தை முன்னிட்டு இந்ந பத்திரிகைச் சந்திப்பு இடம்பெறுகின்றது.
2022, 20203 ஆம் ஆண்டுகளில் எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என உலக மீனவர் செய்தியாக இலங்கை கடற்தொழில் அமைச்சருக்கும், ஜனாதிபதி அவர்களுக்கும்,மாவட்ட அரசாங்க அதிபருக்கும் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு யாழ் கடற்தொழில் சம்மேளத்தினரும், எங்களுடைய எதிர்பார்ப்பும், எங்களுடைய கோரிக்கைகளாகும் என அவர் தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு தொழிலாளர்களது பிரச்சினையிலே, இந்திய இலங்கை மீனவ பேச்சுவார்த்தை இராஜதந்திர ரீதியிலேயே நடைபெற்ற அதற்கு தீர்வு காண வேண்டும் என இந்த மீனவர் தினம் வழிகோர்க்கும் என நம்புகின்றோம்.
இதற்கு துறைசார்ந்தோர் இந்திய இலங்கை மீனவ பிரச்சினைக்கு ஒரு முற்றுப்பள்ளி வைக்க வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கையாகும்.இரண்டாவது கோரிக்கையாக வலி கிழக்கு காணிகளை விடுவிக்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் கடந்த 5,6 ஆண்டுகளுக்கு முன்பு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்ப நடைபெற்ற காணி விடுவிப்பு தொடர்பான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு வலி கிழக்கு மீள்குடியேற்ற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து இவ்வளவு காலம் மக்களது பிரச்சினை தெரியாமல் அல்ல. அவருக்கு நன்றாக தெரிந்தும் இன்று வரை கரையோர காணிகளையும்,ஏனைய மக்களுடைய காணிகளையும், மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் எங்களுடைய காணியும்,கடலும் எங்களுக்கும் வேண்டும்.அதை மீட்டுத் தாருங்கள் என இந்த மீனவர் தினத்திலே கேட்டுக் கொள்கின்றோம்.எங்களுடைய கடற்தொழில் அமைச்சரிடம் நாங்கள் வடகிழக்கு மீனவர்கள் நீண்ட காலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றோம்.
தற்போது இருக்கின்ற சூழலிலே கடற்தொழில் சமூகம் கடலை விட்டு அகற்றப்படும் செயற்பாடு நடைபெறுவதாக எண்ணத் தோன்றுகின்றது என அவர் கூறினார்.
நாங்கள், உண்மையை கூறுகின்றோம்.பொய்யை கூறவில்லை.மக்கள் தெரிவிக்கின்ற பிரச்சினையை இந்த மீனவர் தினத்திலே தெரியப்படுத்துகின்றோம்.கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலில் ஈடுபடாத முடியாத நிலை காணப்படுகின்றது.
இயற்கையாக இருக்கின்ற கடற்வளத்தை 50,100 ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றோம்.அதில் எங்களை வாழ விடுங்கள்.நீங்கள் நவீன வளர்ச்சியை நீங்க செல்ல வேண்டும் என்றால் நாங்கள் அடையாளம் காட்டும் பிரதேசத்தில் முயற்சிகளை முன்னெடுத்து நவீன யுகத்துக்கு கொண்டு செல்லுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.