மீன்பிடி எல்லையை குத்தகைக்கு வழங்கிமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதிப் பேரணியும் மகஜர் கையளிப்பும்!

மூதூர் கடல் எல்லைப்பரப்பில் 150 ஹெக்டேயர் அளவுள்ள கடற்பகுதியையும் , 1 ஏக்கர் அளவுடைய அரச காணியையும் மீன் வளர்ப்புத் திட்டத்திற்கு “குளோபல் சிலோன் சீ பூட் பிரைவட் லிமிட்டட்” தனியார் நிறுவனமொன்றுக்கு நீண்டகால  குத்தகைக்கு மூதூர் பிரதேச சபை தவிசாளர்  வழங்கியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை  மூதூரில் அமைதிப் பேரணியும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.

மூதூர் –  தக்வா நகர் பள்ளிவாயல் இல் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது மூதூர் நகர் வரை சென்றது.இதன்பின்னர் பேரணியாக வருகைதந்தோர் மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச சபையின் நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *