புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட புழுதிவாயல் முஸ்லிம் வித்தியாலய பிரதான நுலைவாயில் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் பிரதம அதிதியாக பலந்துகொண்டு குறித்த பிரதான நுழைவாயிலை திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மதுரங்குளி கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.