கொழும்பு,நவ 21
மின்சார கட்டணத்தை செலுத்தாமையால் எதிர்காலத்தில் கொழும்பு நகரில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படலாம் என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை பல மாதங்களாக 15 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மின்சார சபைக்கு பல்வேறு நிறுவனங்களில் இருந்து சுமார் 40 பில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிலுவையில் உள்ள பில்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். செலுத்தப்படவில்லை.
இதேவேளை, இது தொடர்பான ஊடகச் செய்திகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் விசாரணைகளை மேற்கொண்டப்போது இவ் விடயம் தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரக்கோன் தெரிவித்தார்.
மேலும் தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அட்டாலுகேவின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.