இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகள் அதிகாரி மேஹர் ஜெனரல் உமர் பாரூக் பர்கி அவர்கள் புத்தளத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது புத்தளம் திரியா மகளிர் அமைப்பின் குறைந்த வருமானம் பெருவோருக்கு பாகிஸ்தான் பங்களிப்பினால் பெருமதிமிக்க தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதனையடுத்து புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரின் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெருமதி மிக்க கணினிகள் மேர்ஜல் ஜெனரல் உமர் பாரூக் பர்கி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவாவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்