தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களில் திருத்தம்

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான கட்டணங்கள் திருத்தம் செய்யப்படவுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகப் பிரிவு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தூதரகப் பணிகள் தொடர்பான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பரீட்சை சான்றிதழை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 500 ரூபாவிலிருந்து 800 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பிரஜைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு ஆவணத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணம் 1,500 ரூபாவிலிருந்து ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கை தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மின்னணு ஆவண சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழைப் பதிவுசெய்து வழங்குவதற்கான கட்டணம், இறப்புப் பதிவுக் கட்டணம், திருமணப் பதிவுக் கட்டணம், ஆவணங்களின் சட்டப்பூர்வமான தன்மையை நிரூபிக்கும் சான்றிதழ்களுக்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *