எல்லாத்துக்கும் காரணம் ரணில் தான் – சபையில் மஹிந்த

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கையில்:

நாம் இந்த நாட்டை நாசம் செய்யவில்லை.நல்லாட்சி அரசில் இருந்து நாம் நாட்டை பொறுப்பேற்கும் போதே மிகப்பெரிய கடன் சுமை எமக்கு வழங்கப்பட்டது.அதன் பின்னர் கோவிட் உள்ளிட்ட நெருக்கடி ஏற்பட்டது.அதனையும் நாம் வெற்றி கொண்டோம்.

மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நாம் அரசியல் ஆக்கக்கூடாது.நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்புடன் தங்கியிருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குவது சரியானது.கடினமான நிலையில் நாம் மக்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கின்றோம்.நான் கூறத் தேவையில்லை.காலம் செல்ல செல்ல மக்கள் அதை புரிந்து கொள்வார்கள்.

எம்மை எவ்வாறு கவிழ்ப்பது என்று ஜோசிக்கிறார்களே தவிர ,எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.சிலர் திட்டமிட்டு தான் பொருளாதாரத்தை விழச் செய்தார்கள்.இரண்டு தடவை இவ்வாறு நடைபெற்றுள்ளது.

கூச்சல் போடுவதாலும்,போராட்டம் செய்வதாலும் மக்களை காப்பாற்ற முடியாது.இந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டாலும் ,நாட்டின் நிலைக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் தரக் கூடிய பட்ஜெட்டாக அமைகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *