அவ்வை நடராசனுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி – ஸ்டாலின்

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

87 வயதான அவ்வை நடராசன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அவரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

அவ்வை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை காலமானாா்.

அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அவ்வை நடராசன் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி அமைத்த ஐம்பெருங்குழுவின் உறுப்பினா் ஆவாா். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜொ்மனி, சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *