யாழில் ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை – வடக்கு ஆளுநரின் அதிரடி உத்தரவு

ஆசிரியர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடமாகாண ஆளுநர் பெலிசாருக்கு ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒஸ்மோனியா  பாடசாலை ஆசிரியர் மீது  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார். 

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று, தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான். 

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை, ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு தகவல் சென்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஆளுநர் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *