சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக ஜனகன் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாமானிய டி.எஸ்.சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக  கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி இ  கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று திங்கட்கிழமை(21) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்   சஜித்     பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியினை வழங்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் டி.எஸ் .சேனநாயக்க அரசியல் கல்வி நிறுவனமாகும்.

 இந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தில் செயல்படும் என்று கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாச அவர்கள் குறிப்பிட்டார். 

இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படும் என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.

கலாநிதி ஜனகன்  இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக கல்வி துறை ரீதியான பங்களிப்பும் அனுபவமும் இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்க மிக உறுதுணையாக இருக்கும் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற   உறுப்பினருமான புத்திக பத்திரன கலந்து கொண்டார். 

 இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள்  நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக ஒன்லைன் மூலமும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் கலாநிதி ஜனகன் அவர்களின் வழிநடத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களும் பயன் அடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *