புசலாவை புதிய சப்ளி இரட்டப்பாதை கிராமத்தில் மக்கள் அன்றாடம் நடமாடும் பிரதான பாதையில் நடுப்பகுதியில் மின்சாரம் கம்பம் ஒன்று இரண்டு வருடங்களாக உடைந்து விழுந்த நிலையில் காணப்படுகின்ற போதிலும், எத்தனை முறைப்பார்கள் கொடுத்தும் அதனை இன்னும் முறையாக அகற்றப்படவில்லை என அப்பாதையில் பயணிக்கும் ஊர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த மின்கம்பம் தொடர்பில் பல தடவைகள் கம்பளை மின்சார சபையில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தப் பாதை வழியாக தினம் 150 பேர் தொடக்கம் 200 பேர் வரை செல்கின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்களும், அரச உத்தியோகஸ்தர்களும்,தொழிலுக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் வயோதிபர்கள் என ,ஊர் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தின் மத்தியில் தினம் இப் பாதையில் சென்று வருவதாக கூறுகின்றனர்.
மேலும் சிலர் இரவு நேரங்களில் இந்த பாதையை பயன்படுத்தும் போதை குறித்த மின்கம்பத்தில் மோதி காயமடைந்தும் உள்ளதாக கூறுகின்றனர். எனவே இதற்குப் பிறகு சரி குறித்த கம்பத்தை முறையாக அகற்றித்தருமாறும், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.