10 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இன்று தனுஷ்கோடியில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பலரும் தமிழகத்திற்கு தப்பிச் செல்ல முனைகின்றனர். 

இந்த வகையில் இன்று காலையும் 10 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்கள், 2 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த 2 குடும்பங்களில் 9 பேர், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் மொத்தம் 10 பேர் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *