நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தர முடியவில்லையென்றால் பதவியை இராஜினாமா செய்வேன் – சாமர சம்பத்!

மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள  ரத்தின கற்கள் நாட்டை விட்டு வெளியே போயுள்ளன என்றும் ஆனால் தங்களுக்கு 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து விவாதம் நடத்தி வருவதாகவும் 180 நாட்களுக்குள் நாட்டிற்கு டொலர் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது முயற்சியால் அடுத்த ஆண்டு நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவேன் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *