_637dba0739e85.jpg)
இரத்தினபுரி ஹம்பேகமுவ ஆரம்பப் பாடசாலையில் குரங்குகளின் தொல்லையால் மாணவர்கள் கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வகுப்பறைகளுக்குள் கும்பலாக நுழையும் குரங்குகள் பாடசாலை மாணவர்களை சீண்டுவதாகவும் ,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிய உணவுப் பொட்டலங்களை சாப்பிடுவதாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளை கிழித்து எறிவதாக தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் சிறு குழந்தைகளை நகங்களால் கீறுகின்றன . இதனால் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப முடியாதுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.