
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது நேற்றையதினம் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான, துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராக இன்று காலை குறித்த கல்லூரியின் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது அந்த ஆசிரியர்கள் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்கள்.
அவர்கள் தெரிவித்ததாவது,
அந்த மாணவனின் தந்தையார் இவ்வாறு தாக்கி இருப்பது என்பதனை நாம் திட்டமிட்ட செயலாகத்தான் கருத்திக்கொள்கிறோம். வன்முறையைத் தூண்ட வேண்டும் என்று தான் இவ்வாறு நடந்துள்ளது. நேற்று நடந்தது மாத்திரம் அல்ல அந்த மாணவனுக்கு எதிராக பல ஒழுக்காற்று முறைப்பாடுகள் உள்ளன. இவரை வெளியில் அனுப்புவதற்கு அதிபரிடம் பரிந்துரைகள் செய்திருக்கிறோம். இதனை அந்த மாணவன் கருத்திற்கொள்ளவில்லை.
உடனடியாக அந்த மாணவனின் தந்தை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட வேண்டும்.இன்று எங்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தங்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாகவும்,இது சமூகத்திற்கு பரவக்கூடிய துரதிஸ்டவசமாக இதனை தவிர்க்கும் முகமாக பகிஸ்தரிப்பில் ஈடுபட முடிவு எடுத்திருந்தார்கள்.
ஆனால் கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டிருந்த போது அவர் பாடசாலைக்கு வருவதாக கூறியதற்கிணங்க பாடங்களுக்கு செல்லாமல் பாடசாலைக்கு உள்ளே பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண வலயக்கல்வி பணிப்பாளர் இன்னமும் வருகை தரவில்லை.
இவர் ஆசிரியர் விடயங்கள் தொடர்பாக எந்தளவிற்கு கவனம் செலுத்தியிருக்கிறார் என்று நாங்கள் இந்த இடத்தில் கேள்வி கேட்க விரும்புகிறோம்.
அது மட்டும் எங்கள் போராட்டத்தினை நடத்துவோம். மாணவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டும்.இவரின் செயற்பாட்டினை இன்னொரு மாணவன் முன்னெடுக்கலாம்.இதனை கட்டாயமாக ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தகாலத்தில் யாழ் பாடசாலைகளில் இன்னொரு மாணவனால் நடைபெறக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.ஆகவே ஆரம்பத்திலே இதற்கு தெளிவான முடிவினை பெறுமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் இடம்பெறாது என்பதை தெரிவித்து கொள்கின்றோம் என குறிப்பிட்டனர்.