
காக்கைதீவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்தொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சபையின் ஒன்றரை கோடி ரூபாய் நிதிப் பங்களிப்பில் மீன்விற்பனை நிலையம் மற்றும் அதனுடன் கூடிய நவீன மலசல கூடம் என்பன அமைக்கப்பெற்ற நிலையில் இன்றைய தினம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சுலோச்சனா முருகதாசனால் நடாவெட்டி திறந்துவைக்கப்பட்டதோடு யாழ் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நடராஜா சர்வேஸ்வரனால் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதன் பொழுது மானிப்பாய் பிரதேச கடறதொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ,பொதுமக்கள் ,பிரதேச பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன்,உபதவிசாளர் சி.கணேசவேல்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம் சுலோச்சனா முருகதாசன்,யாழ் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ந.சர்வேஸ்வரன்,பிரதேச சபையின் செயலாளர் ,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.