ஜெருசலேமில் பேருந்து நிலையத்தை குறிவைத்து இருவேறு குண்டுத்தாக்குதல்

<!–

ஜெருசலேமில் பேருந்து நிலையத்தை குறிவைத்து இருவேறு குண்டுத்தாக்குதல் – Athavan News

ஜெருசலேமில் உள்ள பேருந்து நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி குண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புறநகரில் உள்ள பேருந்து நிலையத்தில் முதல் குண்டுவெடிப்பும் இரண்டாவது குண்டுவெடிப்பு நகரின் மற்றொரு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாவது குண்டுவெடிப்பில் 11 பேர் காயமடைந்ததாகவும் அதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் இரண்டாவது உண்டு வெடிப்பில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரையில் பல குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த குண்டு தாக்குதல் பாலஸ்தீனத்தின் தாக்குதலாக இருக்காளா என இஸ்ரேல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *