டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் முகமாக, கஃபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டம் இம்முறை வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக யாழ் மாவட்டத்திற்கான செயலமர்வு யாழ் நூலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதன் வளவாளர்களாக சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ். மயூரனும் ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான கலாவர்ஷ்னி கனகரட்ணமும் கலந்துகொண்டனர்.
இணைய பயன்பாடு மற்றும் இணையத்தை பயன்படுத்தும் போது முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இதன்போது தெளிவூட்டப்பட்டது.
இச்செயலமர்வில், கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன், கபே அமைப்பின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான தினேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
