கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்!

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வண.கல்வெவ சிறிதம்ம தேரர் எதிர்வரம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கல்வி அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *