_637e1b6ac9ef4.jpg)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.சி.சி ரி20 உலகக் கோப்பையின் போது ,வீரர்கள் ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சாமிக்க கருணாரத்ன செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மூவரடங்கிய விசாரணைக் குழு நடத்திய ஒழுக்காற்று விசாரணையை , இலங்கை கிரிக்கெட் சபை தற்போது அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில், கருணாரத்ன தனக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கருணாரத்னவின் மீறல்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணைக் குழு தனது அறிக்கையின் மூலம் வீரரை மேலும் மீறுவதைத் தவிர்க்கவும், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தண்டனையை விதிக்கவும் கடுமையாக எச்சரிக்குமாறு SLC இன் நிர்வாகக் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்னர் , அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடையை SLC இன் நிர்வாகக் குழு கையளித்துள்ளது.
மேலும் கூறப்பட்ட இடைநிறுத்தப்பட்ட தண்டனைக்கு மேலதிகமாக கருணாரத்னவுக்கு எதிராக USD 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.