மருந்துகள் சட்டமூலத்துக்கு ஒப்புதல்

விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதையடுத்து இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விஷம், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

காலத்தின் தேவைக்கேற்ப போதைப் பொருட்களை இறக்குமதி செய்தல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த இந்தச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *