
இலங்கை அணியின் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் சபை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை விதித்துள்ளது.
அண்மையில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான குற்றத்தை சாமிக்க கருணாரத்ன ஒப்புக்கொண்டுள்ள நிலையில் போட்டித் தடைக்கு மேலதிகமாக, சாமிக்க கருணாரத்னவுக்கு 5000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கவும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவுஸ்ரேலியாவின் சிட்னியில் உள்ள இரவு விடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டதாக சாமிக்க கருணாரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.மேலும் வாசிக்க