நடுகைப்பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் ஆரம்பம்!

திருகோணமலையிலமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று(23) விதை மற்றும் நடுகைப்பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம்.எஸ்.பி.ரத்னாநக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அனுசரனையில் மாகாண விவசாய திணைக்கள நலன்புரிச்சங்கம் இதன் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. 
கத்தரி, மிளகாய், வெண்டி, தக்காளி உள்ளிட்ட 10 வகையான மரக்கறி  மற்றும் பழவகை விதைகள் உள்ளடங்கிய பக்கெற் 200 ரூபாயக்கும் Tom EJC ,விலாட் மற்றும் கறுத்தகொழும்பான் ஆகிய மாமரக்கன்றொன்று 350 ரூபாவுக்கும் ஏனைய மரக்கன்றுகள் 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சேதனப்பசளைகள், வி்வசாய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களும் இங்கு விற்பனைக்காக விடப்படவுள்ளது.

தமக்கு அவசியமான காய்கறி மற்றும் பழ வகைகளை வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்வதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ்விற்பனை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *