சபாநாயகரின் உத்தரவின் பின்னரும் சமிந்த விஜேசிறி சபையின் இருந்தது ஏன்?

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை தாக்க முயன்றதாகக்கூறி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் அவர் சபையிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்தும் அமர்வில் பங்கேற்றார்.

இந்த நிலையில், சபாநாயகர் உத்தரவின் பின்னரும் சமிந்த விஜேசிறி வெளியேறாமை தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், சபாநாயகர் குறித்த சந்தர்பத்தில் மாத்திரமே அவரை வெளியேறக்கோரியதாகவும், முழு நாளும் அல்லவென தெரிவித்தார்.

அதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சபாநாயகரின் உத்தரவினால் மாத்திரம் சபையிலிருந்து உறுப்பினர் ஒருரை வெளியேற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

அவ்வாறு வெளியேற்றுவதாயின், நிலையியற் கட்டளையின் 77 ஆவது சரத்தின் பிரகாரம் யோசனையொன்றை முன்வைத்து அது நிறைவேற்றப்பட வேண்டும் என விளக்கமளித்தார்.

தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தன, நல்லாட்சி காலத்தில் இவ்வாறான யோசனை மூலமாக சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *