நுவரெலியாவாக மாறிய அம்பாறை,மக்கள் பெரும் அசௌகரியம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக அதிகாலை முதல் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த பனிமூட்டம் நுவரெலியாவை போன்று காட்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதியால் செல்லும் வாகன சாரதிகள்,பொதுமக்கள்,போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த பனி மூட்டம் அதிகாலையில் இருந்து சுமார் 7 தொடக்கம் 8 மணி வரை நீடிக்கின்றது, என்றும் காலையில் தொழிலுக்கு செல்வோர், பாடசாலைக்கு செல்வோர் என்பவர்களே இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை, காரைதீவு,நிந்தவூர்,பாலமுனை,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில்  போன்ற பல  பிரதேசங்களிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *