மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது .இருப்பினும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
காய்ச்சல், தலைவலி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வருடம் இது வரை மன்னார் மாவட்டத்தில் 236 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.