ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் – கல்வி அமைச்சு

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப தேசிய கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்தத் துறைக்கு ஒரு குழுவைக் கொண்டுவர வேண்டும். இந்தத் தேர்வு இறுதியாக நடத்தப்படும்.

அதன் பின்னர், நாங்கள் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்து, 19 பீடங்களை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்.

4 ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிக்குப் பின்னர் ஒரு தரமான ஆசிரியர் வகுப்புக்கு அனுப்பப்படுவார்.

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்வதற்கான பொதுப் பரீட்சை டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தப்படும். 26,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பொதுப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகள் மூலம் உரிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்” எனவும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *