_637f18d53f493.jpg)
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்:
பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பலர் இங்கே கூச்சல் போடுகின்றனர்.அதிலும் இராணுவம் தொடர்பில் தொடர்பில் தவறாக பேசுகின்றனர்.பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் ,இராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு நாள் சாப்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை.
நாள் ஒன்றுக்கு சுமார் 645 ரூபா இராணுவ வீரர் ஒருவருக்கு உணவுக்காக ஒதுக்கப்படுகிறது.உண்மையில் 1084 ரூபா ஒதுக்கப்பட வேண்டும்.பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டாலும்,இவர்களின் உணவு இவ்வாறாகத் அமைகிறது.
நாட்டின் விடிவுக்காக போராடியவர்கள் இராணுவ வீரர்கள் .அதை மறக்கக் கூடாது.ஆகவே ஒரு இலட்சத்து 75 ஆயிரம் இராணுவத்துக்கு ,2.8 பில்லியன் ரூபா தேவைப் படுகிறது.ஆனால் இன்று வரை அவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றார்.