இலங்கை பொருளாதாரத்தின் திசை எங்கே செல்கிறது? மக்களின் எதிர்காலம் என்ன?

பொருளாதாரச்
சீர்குலைவு மாபெரும் பேரழிவு. சாதாரண மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பொருட்களின் விலை மூன்று மடங்காக
அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான பால் மாவு முதல்
மீன் உள்ளிட்ட புரதங்களைக் கொண்ட இறைச்சி வரை அனைத்தும் விலை
அதிகமாக உள்ளது. இதனால் புரதம் எடுத்துக்கொள்ளும் விகிதம் குறைந்து மனிதர்களின் போஷாக்கு குறைகிறது. சாதாரண மக்களின் வருமானம் அதிகமாகாமல் பொருட்களின் விலை மட்டும் அதிகமாகியுள்ளதால்,
அங்கு வாழ முடியாத நிலை
உருவாகியுள்ளது.

இலங்கையின்
தற்போதைய நிலவரம் ஒரு பொருளாதார நெருக்கடி
(economic crisis) என்பதிலிருந்து
மனித வாழ்க்கை நெருக்கடி (humanitarian
crisis) என்ற நிலையை எட்டிவருகிறது.

தற்போதைய
நிலைமையை சுறுக்கமாக உற்று நோக்கும் போது இலங்கையின் நிதி
நிலைமை மிகவும் மோசமான நிலையில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. அடுத்த
கோணத்தில் அதன் முன்னேற்ற வேகம்
மிகவும் மந்த கதியில் இருப்பதாக
கூறினால் அது மிகச் சரியாகும்.

தற்போது,
ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி போல சமகாலத்தில் கண்டதில்லை
எனப் பலரும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில்,
1970ம் ஆண்டுகளில் காணப்பட்ட பஞ்ச நிலைமையை விடவும்,
தற்போது நாடு மிகப்பெரிய பொருளாதார
நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.

1970களில்
இறக்குமதிக்கு தடை விதித்ததே அன்றைய
நிலைமைக்கு காரணம். ஆனால் இப்போது இறக்குமதி செய்வதற்கு பணமே இல்லாமல் நாடு
தவிக்கிறது.

 இலங்கையின் தற்போதைய
பொருளாதார
நெருக்கடியின்
அடிப்படை
காரணங்கள்:

1. போராட்டத்தின்
நோக்கம் ஆட்சியை மாற்றுவது

2. போராட்டம்
வெளிநாட்டு நிதியுதவியூடு முன்னெடுக்கப்பட்டமை.

3. போராட்டம்
மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்காமை.

4. போராட்டத்தில்
உழைக்கும் அடிமட்ட மக்களின் பங்களிப்பு போதாமை.

5. குறுகிய
அரசியல் நோக்கம் காணப்பட்டமை. ( ஜேவிபி க்கு முடிந்தது இதுதான்
என இன்று அரச சார்பு கட்சிகள்
குற்றம் சுமத்தியுள்ளன.)

6. உலக
அளவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார உணவு நெருக்கடி. (கொரோனாகாலநிலை
மாற்றம்ரஷ்ய
உக்றேன் யுத்தம் )

7. இலங்கை
பொருளாதாரம் மூழ்கும் ரைரானிக் போன்று உள்ளமை.

8. உற்பத்தி
அற்ற/ உழைப்பு அற்ற சொகுசு வாழ்க்கை
முறை.

9. கடந்த
ஆட்சியின் சீர்செய்ய முடியாத நிதி நிலைமை.

10. இன்னும்
தொடரும் அரசியல் வாதி களுக்கான வரப்பிரசாதங்கள்.

மேலும்,
இன்றுள்ள  கட்சிகளின்
நிலையை பார்க்கும் போது இன்னொரு மக்கள்
போராட்டம் வெடிக்கலாம். வீதிக்கு மக்கள் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இலங்கைக்கு எவ்வளவு
கடன்
இருக்கிறது?

இலங்கைக்கு
சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என
மதிப்பிடப்படுகிறது. அதில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த
வேண்டியிருக்கிறது.

ஆனால்,
இலங்கையின் கையிருப்பில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இலங்கை ரூபாய்
செல்லாததாகி
விடுமா?

இலங்கையின்
நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதனால் முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து
வேறொரு நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற கேள்வி இயற்கையாகவே
எழுகிறது.

ஆனால்
மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை.

இலங்கை
பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமதியை இழந்துக்கொண்டிருக்கின்றது. பாரிய முதலீடுகள், சர்வதேச நாடுகளின் உதவிகள் அல்லது நன்கொடைகள் கிடைப்பதன் ஊடாக, இந்த நிலைமையிலிருந்து மீளலாம்.
ஆகவே, அதன் அடிப்படையில் இன்னுமொரு
நாட்டின் நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்று கருத முடிகிறது.”

இலங்கை
கடலினை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும் வான் பரப்பை விற்பதாகவும்
கொந்தளிப்பு

இலங்கை
பொருளாதார நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும்? – 5 வாய்ப்புகள்

ஒருவேளை
இலங்கையின் ரூபாய் முற்றிலும் மதிப்பிழந்தால், “இலங்கைக்கு அருகில் இருக்கக்கூடிய இந்தியா அல்லது சீனாவின் நாணயத்தை இலங்கை பயன்படுத்தலாம். ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கைக்கு யார்
உதவி
செய்வார்கள்?

சீனா
மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதி
உதவியையே இலங்கை நம்பியிருக்கிறது என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம். ஒரு பில்லியன் அமெரிக்க
டாலர் கடன் வழங்க இந்தியா
ஒப்புக் கொண்டிருக்கிறது.

இவற்றைக்
கடந்து முதல் முறையாக ஐஎம்எஃப் என அழைக்கப்படும் சர்வதேச
செலாவணி நிதியத்தையும் இலங்கை அணுகியிருக்கிறது. அதன் பிரதிநிதிகளை கோட்டாபய
ராஜபக்ஷ சந்தித்துப் பேசினார். ஐஎம்எஃப்பிடம் கடன் பெறுவதில்லை என்ற
தனது முந்தைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ள
வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீனாவும்
இலங்கையின் அந்நியச் செலாவணி நிலையை மேம்படுத்த ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஜப்பான்,
வங்கதேசம் ஆகிய நாடுகளிடமும் இலங்கை
கடன் பெற்றிருக்கிறது.

ஐஎம்எஃப்இடம்
கடன்
பெறுவதில்
சிக்கல்
உண்டா?

சர்வதேச
செலாவணி நிதியும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன்களைக் கொடுத்துவிடக் கூடிய அமைப்பு அல்ல. இந்தியா, இலங்கை உள்பட 190 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட அமைப்பு அது.

பொருளாதாரத்தை
மீட்டெடுக்க வரிகளை உயர்த்த வேண்டியது சர்வதேச செலாவணி நிதியத்தின் முதல் விதியாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம்.

இதனால்
பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரிகள் கணிசமாக உயரக்கூடும். பல்வேறு வகையான இலவச, குறைந்தவிலை சமூக நலத் திட்டங்களில்
சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிடும்.

ஐ, எம்எஃப்

ஆயினும்
ஐஎம்எஃப்இல் கடன் பெறுவதன்
மூலம் இலங்கையின் கடன் தர நிலை
மேம்படும் என்றும், அதனால் பிற கடன்களை அடைப்பதற்கு
அவகாசம் பெறுவது தொடர்பான பேச்சுகளைத் தொடங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அரசியல் நிலை
எப்படியிருக்கிறது?

இலங்கையில்
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த நெருக்கடிக்கு அரசே
காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

அதிபர்
கோட்டாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்தவோ பதவி விலகப் போவதில்லை
என தெரிவித்திருந்தனர். ஆனால் தொடர் போராட்டம் அதனை அடுத்து எழுந்த
வன்முறை காரணமாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகினார். பின் ரணில் விக்ரமசிங்க
பிரதமராக பதவியேற்றார்.

பதவியேற்ற
பிறகு பேசிய ரணில், இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்க ஏனைய நாடுகள் மற்றும்
சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின்
உதவிகள் அத்தியாவசியமாக தேவை என்று தெரிவித்தார்.

சமீபமாக
சிறப்பு உரையாற்றிய ரணில், இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களில் வாழ்க்கையை
சாதாரணமாக வைத்திருக்க 5 பில்லியன் டாலர்கள் தேவை என்று தெரிவித்தார்.

மேலும், “எரிவாயு இறக்குமதிக்காக ஒரு மாதத்திற்கு 40 மில்லியன்
அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியுள்ளது. அடுத்த 6 மாத காலத்திற்கு எரிவாயு
இறக்குமதிக்கு 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றது.

எரிபொருள்
மற்றும் சமையல் எரிவாயுவை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

அத்தியாவசியமற்ற
பயணங்களை இயலுமான வரை மட்டுப்படுத்திக் கொள்ளவும்.”
என்றும் பல அரசியல் ஆய்வாளர்கள்
கூறுகின்றார்கள்.

உலகமே
இலங்கையை பரிதாபத்தோடு பார்க்கிறது. பஞ்சம் பீடித்திருக்கும் இந்த தேசத்திலிருந்து வெளியேறினால்தான்
வாழ்வென்பதே சாத்தியம் என இலங்கையின் இளைஞர்கள்
தங்கள் நாட்டைத் துறந்து வெளிநாடுகளில் தஞ்சமடைய பலநாட்டுத் தூதரகங்களின் வாயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில்
படகில் வந்திறங்கியவர்கள் அங்கே நிலவும் பஞ்சத்திற்கு சாட்சியாக நிற்கின்றனர்

மக்களின் எதிர்காலம்
என்ன?

தமிழர்
பகுதிகளில், நிரந்தரத் தீர்வென்ற ஒன்று இல்லாததால், அரசு சார்பான மனநிலை
பெருகாது. வரும் சித்திரைக்குள் தமிழர் பகுதிகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்று ரனில் விக்கிரமசிங்கே சொல்லியிருந்தாலும், இதுவரை இலங்கை அரசாங்கம் சொன்னவற்றை நிறைவேற்றாத காரணத்தால் அதன்,மீது தமிழர்களுக்குச்
சந்தேகம் இருக்கிறது.

அமெரிக்க,
அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி வடக்கு கிழக்கு
பெயர்களைச் சொல்லி வழங்கப்பட்டாலும், வருகிற பணம் எல்லாம் கொழும்பிலே
தான் இருக்கிறது. கொழும்பிலே நிர்வாகச் செலவுகளுக்கு பணத்தை அள்ளிச் செலவிட்டு விட்டு, வடக்கிலே கிள்ளித்தான் தெளிப்பார்கள்.

ஒரு
அமைச்சர் வந்தால் பின்னால் பத்து கார்கள் வருவதும், உணவுக்குச் செலவிடுவதுமாக இருந்த நிர்வாகத்தில் இன்றுவரை மாற்றம் ஏதுமில்லை. அதே அமைச்சர், அதே
செயல்பாடு என்றிருக்கும்போது அவர்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார்கள் என நம்புவது சிரமம்
தான்.

இந்த,  பொருளாதாரச்
சிரமம் 5 வருடம், பத்து வருடம் தொடரும் என்கின்றனர் வல்லுநர்கள். 350க்கும் மேலே உள்ள இலங்கை
ரூபாய்க்கான டொலர் மதிப்பு மேலும் உயரும். மிதப்பு நிலையில் விடாமல் ரூபாய் மதிப்பைத் திட்டமிட்டு கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் போலியான நிரந்தரத்தன்மையைக் காட்டுகிறது; மத்திய வங்கியின் செயற்பாடு அரசியல்,மயப்பட்டிருப்பதால் நம்பிக்கையற்ற சூழல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது.

இலங்கை,
மக்களின் இன்றைய நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, மக்களும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்து ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும். அப்படி இல்லாமல் இனவாதம் பேசும் கட்சிகளின் பக்கம் நிற்பது எந்நாளும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது.

இலங்கை,
அரசியல் எப்போதும் இனவாதத்தையே கையில் எடுத்து செயல்படுகிறது. சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று தேசம் பிளவுபட்டு நிற்கிறது. ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டுவது அங்கே சாதாரணமாக இருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி
அந்த மக்கள் ஒன்று கூடி உழைக்கும் பொழுதுதான்
சாத்தியமாகும்.

அரசியல்வாதிகள்,
தங்களின் சுய லாபத்திற்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும்
இனவாத சிந்தனையை மக்கள் மனங்களில் விதைக்கிறார்கள். அரசியல்வாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் குடிமக்களின் கடமை.

ஓர்
இனம் அழிய மற்றோர் இனம்  வேடிக்கை
பார்க்குமானால், தனக்கும் அத்தகைய நிலை நாளை ஏற்படக்கூடும்
என்ற புரிதல் இல்லாமல் போகுமானால் அந்த தேசத்தின் வீழ்ச்சியை
யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையின் வீழ்ச்சி கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *