எனக்கு விசரும் இல்லை,பயமும் இல்லை – கோட்டாவை நான் கட்டிப் பிடிக்கவும் இல்லை – சபையில் ரணில் சிரிப்பு மழை

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்:

எனக்கு மூன்று பயம் உள்ளதாக ,நாடளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹுமான் கூறியுள்ளார்.எனக்கு எந்தப் பயமும் இல்லை.பதவி தாருங்கள் என்று நான் யாரின் காலிலும் விழவில்லை.நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார் ,அடுத்த இடத்தில பிரதமர் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும்.அந்த இடத்தில என்னை ஜனாதிபதியாக்கினார்கள்.

நான் கோட்டபாயவை கட்டிப் பிடிக்கவும் இல்லை.இவர்கள் கூறிய அந்த மூன்று பயம் பற்றி எனக்கு தெரியவில்லை.நோய்,அமானிஷம்,மரண பயம் இவை தான் அந்த மூன்றும்.ஹிருணிகா,மரிக்கார் தான் இந்தப் பயம் என்று இவர்கள் கூறுகிறார்களோ தெரியவில்லை.

என்னுடைய வீட்டுக்கும் தீ வைத்தார்கள்.மே 12 ஆம் திகதி,சஜித் பிரேமதாசா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.என்னை பிரதமர் ஆக்குங்கள் என்று.நான் யாரிடமும் பதவிக்காக நிற்கவில்லை.இராணுவத்தினர் நாட்டுக்கு முக்கியம்.அவர்களுக்கு அதிக செலவு உண்டு.பதவி உயர்வு வழங்க வேண்டிய நிலை உள்ளதால் ,செலவு உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *