திருகோணமலையில் வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சி பட்டறை!

திருகோணமலை மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் மனிதாபிமான செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான TOT பயிற்சி நெறியொன்று 22ம் திகதியன்று திருகோணமலை ஜேகப்பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.

குறித்த பயிற்சியானது சேவ் த சில்ரன்(Save the children) மற்றும் லீட்ஸ் நிறுவனம் இணைந்து யுஎஸ்எயிட்(US 8) நிதி அனுசரனையில் இடம் பெற்றது. குறித்த திட்டமானது தம்பலகாமம், கந்தளாய், குச்சவெளி, பதவிசிறிபுர ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் அனர்த்த முகாமைத்துவம், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, பால் நிலை சமத்துவம் உள்ளிட்ட பல விடயங்களில் தெளிவூட்டல் பயிற்சி இடம் பெற்றது. குறித்த பயிற்சிக்கு வளவாளராக அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சுகுனதாஸ் கலந்து கொண்டார்.

இதில் தெரிவு செய்யப்பட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள், லீட்ஸ் ,சேவ்த சில்ரன் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *