மலையகத்தில் நீர்நிலைகளின் மூலம் நோய் பரவும் அபாயம்!

நீர் ஏந்து பகுதியில் உள்ள மவுஸ்சாகலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் காட்டாறுகள் மற்றும் சிற்றாறுகள் மூலம் குப்பைகள் வந்து குவிந்துள்ளன.

இதனால் நீரில் வாழும் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் தோன்றியுள்ளது. மேலும் தொடர்ந்து குப்பைகளை ஆற்றில் வீசுவதால் ஆற்றை அண்டிய பகுதியில் வாழும் மனிதர்களுக்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றும் குப்பைகள் உள்ள பகுதிகளில் துர்மணம் வீசுவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் அசௌகரியம் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கின்றனர்.

மேலும் இது தொடர்பில் நீர் மின்நிலைய அதிகாரி தெரிவிக்கையில் பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர மக்கள், கிராம மக்கள் எக் காரணம் கொண்டும் கங்கையில் குப்பைகள் எரிய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *