இயற்கைப் பசளையைப் பயன்படுத்தி நஞ்சற்ற மரக்கறிகளை அறுவடை செய்வதை பொது மக்களுக்கும், அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் அறிமுகம் செய்யும் நிகழ்வு சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பயற்றங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய்,
துபாய் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளும், மாங்காய், கொடித் தோடை என்பனவும் அறுவடை செய்யப்பட்டன.
அரச ஊழியர்களின் இந்த முன் மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.