வலி.வடக்கில் 30 வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்ட திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 58வது நிறைவையொட்டி, வலி வடக்கில் 30 வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்ட வள்ளுவர் புரத்தில் கருங்கல்லிலான திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வும், பரிசளிப்பு வைபவமும் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்கள் தொழிலதிபர் மற்றும் சமூக சேவையாளர் திரு.அ.கொண்சன், தொழிலதிபர் மற்றும் சமூக சேவையாளர் திரு.இ.ரவிக்குமார்m திருவள்ளுவர் சனசமூக நிலைய தலைவர் திரு.அ.அருள்பிரகாஸ் J.P, முதன்மை விருந்தினர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு.S.சிவசிறி, வலிவடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், அன்னைவேளாங்கண்ணி ஆலயம் பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அடிகளார், திரு.திருமதி மகேந்திரம் ரோகிணி தம்பதியினர், J/247 கிராம சேவையாளர் திருமதி.காயத்திரி ராஜீவ், J/246 கிராம சேவையாளர் திரு.அ.நிசாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ப.இளங்கீரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.செ.சிறீகரன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தீராஜீவ், திரு.யோ.யூபின், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மேரிலதிஸ்கா இருதயநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலை திறந்து வைத்து, கொடியேற்றல், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்

செல்வன் அ.வருணப்பிரகாஸ் வரவேற்புரையும், அருட்திரு.தேவராஜன் அடிகளார் ஆசியுரையும், பிரதம விருந்தினர்களின் உரை, கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *