ரணில் உங்களை கொல்லப் போகின்றார் – சிங்கள இளைஞர்களே கவனம் – சிறீதரன் எம்.பி ஆவேசம்

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்:

இங்கே பல உறுப்பினர்கள் பிரபாகரனின் நற் பண்புகள் பற்றி பேசி இருந்தார்கள்.இப்போது தான் அவர் பற்றி எல்லோருக்கும் புரிகிறது.தமிழ் மக்கள் கடந்த ஆண்டுகளில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.

இப்போது இராணுவத்தை இங்கே குவித்து சிங்கள இளைஞர்களை கொல்லப் பார்க்கிறார் ரணில்.ஆகவே சிங்கள இளைஞர்களே அவதானமாக இருங்கள்.

இப்போது உள்ள ஜனாதிபதி தான் 1989 ஆம் ஆண்டுகளில் ,இளைஞர்களை கொல்லும் புதைகுழிகளை வைத்திருந்தார் என்று செய்திகள் உள்ளன.கல்விக்காக நிதியை ஒதுக்குங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இங்கே தெரிவித்து இருந்தார்.ஆனாலும் பாதுகாப்புதுறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை விதைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *