திருமலை, பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை – வெருகல் பிரதேச பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் 26 பேருக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  வெருகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இப்பிரதேசத்தில் சில கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தூரப்பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தருவதுடன் போக்குவரத்து பிரச்சினைகளையும் முகங்கொடுத்திருந்தனர்.

இதனை நிவர்த்திக்கும் வகையில் வேல்ட் விசன் நிறுவனம் இத்துவிச்சக்கர வண்டிகளினை வழங்க அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம். ஏ.அனஸ், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *