
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் மீதுதாக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டனம் தெரிவிக்கும் முகமாக இந்த ஊடக சந்திப்பினை இன்று நடாத்துகிறோம் .இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாகும்.
அந்த ஆசிரியருக்கு நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும் .நாட்டில் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்திருக்கும் நிலையில் இந்த நெருக்கடியில் மத்தியில் நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.பாடசாலை என்பது புனிதமான இடம்.அது எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் தொழில்களையும் இழக்க நேரிடுகிறது.
.இலங்கையின் கல்வி சமூகத்தில் கல்வி கற்பித்துக்கொண்டிருக்கும் எந்தவொரு ஆசிரியர் மீதும் வன்முறை தாக்குதலினை முற்றாக தடை செய்ய வேண்டும்.இதற்கு நாங்கள் முற்றாக எதிர்ப்பு கூறி நிற்கின்றோம்.குறித்த சம்பவமானது ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தை கவலைக்கு ஈட்டி சென்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் கல்வி,ஒழுக்கம் ஆகியவற்றில் உன்னிப்பாக கவனம் செலுத்தும் ஆசிரியர்களை தாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.எனவே இன்றைய கால கட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழுகின்றோம்.
பொருளாதார நெருக்கடி,சமூக நெருக்கடி,பாலியல் துஸ்பிரயோகம்,போதை பாவனை இவ்வாறு பல வகையான பிரச்சினையில் இந்த கல்வி சமூகமானது, மாணவர்களது கல்வியை உயர்த்துவதற்கு பாடுபட்டு கொண்டிருக்கும் சமயத்தில் இவ்வாறான செயலை நாங்கள் முற்றாக கண்டிக்கின்றோம் என அவர் கூறினார்.
பாடசாலைக்குள் நுழையும் எவரையும் சந்தேகத்துடன் நோக்கி உரிய வழிமுறைகளை பின்பற்றி இவர் பாடசாலைக்கு அனுமதிக்க கூடியவரா என்று பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியதை அடுத்து நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
பாடசாலை அதிபர்,வலயம்,கல்வி அமைச்சு,மாகாண கல்வி அமைச்சர் ஆகிய அனைவரும் ஒரு சிறந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும்.பாடசாலை ஆசிரியர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.ஆசிரியர்களே உங்கள் மாணவர்களது கல்வி செயற்பாட்டில் ஆர்வமாக ஈடுபடுங்கள்.உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் சமயத்தில் உங்களோடு ஆசியர் சங்கம் பயணிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.