போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை வழங்கும் திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலில் வரவுள்ளது.
5gக்கு அதிகமாக போதைப்பொருட்களை விற்பனை செய்தல், வைத்திருத்தல் என்பற்றில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை மற்றம் ஆயுள் தண்டனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான, 2022ம் ஆண்டின் 41ம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் திருத்தச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.





