தரவை மாவீரர் துயிலுமில்ல அஞ்சலி மேடையை தரைமட்டமாக்கிய விசமிகள்!

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்காக, மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் புதுக் கட்டமைப்பால் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த மேடையை இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு உடைத்து எறிந்து, அங்கிருந்த கற்களையும்  உடைத்து அசம்பாவிதம் செய்துள்ளனர்.

இப் பகுதியில் இனந்தெரியான நபர்களின் சப்பாத்துக் கால் தடங்களும் காணப்படுகின்றது என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *