
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாஃறு குறிப்பிட்டுள்ளார்.
தமது கடிதத்தில் தேர்தல் உட்பட்ட 5 விடயங்கள் தொடர்பாக வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைவிடுத்து, தனக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்ஷர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.