இலங்கையில் சோகம் – இறக்குமதி செய்யப்பட்ட 3991 பசு மாடுகள் உயிரிழப்பு

2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிலிருந்து 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்நடைச் சபையை கோப் குழு முன்னிலையில் அழைத்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

மேலும் பதினைந்தாயிரம் கறவை மாடுகளை இறக்குமதி செய்வதற்காக நான்கு வருடங்களுக்கு முன்னர் முற்பணமாக 11.01 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் இது வரையில் ஒரு கறவை மாடு கூட நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *