மைத்திரியின் வீட்டை விட்டு செல்லமாட்டேன்- அடம்பிடிக்கும் முக்கிய அமைச்சர்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்த நிலையில் தம்மை அடித்து விரட்டினாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என துறைமுகங்கள் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை அவர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் தீர்மானித்தது.

இந்நிலையில் குறித்த இடைநிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *