_63806027d5b28.jpg)
இலங்கையில் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பரிந்துரைப்பதற்கும் பணியகத்திடம் இருந்து பதிவு உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
அத்தகைய உரிமத்தைப் பெறுவதற்கு, 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பணியகச் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டின் 4 மற்றும் 2009 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டங்களின்படி, வெளிநாட்டு வேலைக்காகப் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அவர்களின் ஒப்பந்த சேவைக் காலத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
மற்றும் பணியிடத்தில் ஏதேனும் பிரச்சனையான சூழ்நிலை இருந்தால், தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.மேலும், வேலைவாய்ப்பு ஒப்பந்த விதிமுறைகளை மீறாமல், அத்தகைய நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, வேலை வாய்ப்புகளை வழங்குவது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பொறுப்பாகும்.
சேவை ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக பணியகத்திற்கு வேலை தேடுபவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், தீர்வுகளை வழங்க முன்வராத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களும் பணியகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறியுள்ளதால், பணியகம் இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி, நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாலும், நீதிமன்றத்தை தவிர்க்கும் நோக்கில் அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் செயற்படுவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியக உரிமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.