தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு!

மஸ்கெலியா காட்மோர் தோட்ட நிர்வாகம் தமக்கு சேர வேண்டிய ஊதியங்களை சரியாக பராமரிக்காமை தொடர்பாகவும், தோட்ட பொதுமக்களுக்கும் முகாமையாருக்கும் ஏற்பட்ட வாய் தர்க்கம் காரணமாக,  தோட்ட பொதுமக்கள் தொடர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் விளைவாக 23 ம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி இணைந்து மஸ்கெலியா காட்மோர் தோட்ட முகாமையாளர் காரியாலயத்தில் நேற்று சுமூக பேச்சுவார்த்தை ஒன்று நடத்தினர். இதன் போது தோட்ட தொழிலாளர்களின் நலம் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைத்துள்ளது.

அதன் படி தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி என்பன ஒரே முறையில் தொழில் திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எதிர் வரும் 28 ம் திகதி சகல தொழிலாளர்கள் கணக்கிலும் சரியான தொகையை பெற்றுக்கொள்ள முடியும், என தோட்ட உரிமையாளர் கூறியுள்ளார்.

மேலும் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் சகல பிரச்சினைகள் முறையாக தீர்வு காணப்பட்டு நேற்று 24 ம் திகதி முதல் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு சென்றனர்.

18 கிலோ தேயிலை கொழுந்து பறித்தால் 1000ரூபா வேதனம், குழந்களுக்கு பால் மா வழங்கள், சுகாதார வசதிகள் வழங்கள், நோயாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தல், பிரேத பெட்டி எடுக்க பணம் வழங்கல் போன்ற பலவற்றிக்கும் தீர்வு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *