_638066c903685.jpg)
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 15,000 லீற்றர் சுத்தமான கித்துள்பாணி மாதந்தோறும் நான்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்கேற்பு திட்டத்தின் (SAPP) பணிப்பாளர் கலாநிதி யசந்த மாபதுன தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கித்துள் பாணி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்துக்கு 10,000 லீற்றரும் கொரியாவுக்கு 3,000 லீற்றரும் ஜப்பானுக்கு 200 முதல் 300 லீற்றரும் ஏற்றுமதி செய்கிறார்கள் என அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக,கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சுத்தமான கித்துள் வெல்லத்தை ஏற்றுமதி செய்து வருவதாகவும், எஹலியகொடவில் உள்ள மீ ரச சுற்றாடல் உற்பத்தி நிறுவகத்தின் ஊடாக இந்தப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எஹெலியகொட பிரதேசத்தில் மாத்திரம் 500க்கும் மேற்பட்டோர் கித்துல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
500 மில்லி லீற்றர் கித்துல் பாணி அடங்கிய போத்தல் ஒன்று கொரியாவில் 17,000 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.